×

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி இபிஎஸ் சார்பில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்..!!

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி இபிஎஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவராக நீடிக்க சபாநாயகர் அனுமதித்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய துணைத் தலைவர் நியமனத்தை அங்கீகரிக்கக் கோரிய மனு மீது சபாநாயகர் முடிவெடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

The post எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி இபிஎஸ் சார்பில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,EPS ,RP Udayakumar ,President ,Chennai ,AIADMK ,General ,RB Udayakumar ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...