×

பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் உருவாகிக் கொண்டுள்ளது: திருமணவிழாவில் முதலமைச்சர் உரை

சென்னை: சென்னையில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்ல திருமணவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த திருமணவிழாவில் முன்னின்று மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். திமுக ஆட்சியில் சீர்திருந்த திருமணங்கள் அங்கிகரிக்கப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நான் மேயராக இருந்தபோது சென்னையில் 10 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே திட்ட மதிப்பீட்டை விட குறைவாகவே பழங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் அவர்கள், பெரிய பெரிய பதவியில், பெரிய மாளிகையில் இருந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இப்படி கேட்பவர்களின் பதவி என்பதே வேஸ்ட். திராவிடம் என்றால் என்ன என்று உங்களை கேட்கவைத்துள்ளது தான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறாரே அவரே தொடர்ந்து ஆளுநராக இருக்கட்டும். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் தயவு செய்து இங்குள்ள ஆளுநரை மட்டும் என்றைக்கு மாற்றி விடாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை தேர்தல் வரை ஒன்றிய அரசு மாற்றிவிட வேண்டாம் என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். பெரிய பெரிய மாளிகையில் இருந்து கொண்டு பதவியில் அமர்ந்திருப்பது வீண். மத்தியில் நடைபெற்று வரும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு முடிவுகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழ்நாடு மக்கள் ஆளுநர் ரவியை பொருட்படுத்தவில்லை. 5 மாநில தேர்தல்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு மூலம் உறுதியாகியுள்ளது.

கடந்த 2 நாட்களாக ஆளுநர் புருடா வீட்டுக் கொண்டிருக்கிறார். ஆளுநர் பேசுவதை மக்கள் பொருட்படுத்தவில்லை. ஆளுநராக ரவியே இருக்க வேண்டும்; நம்முடைய பிரச்சாரத்துக்கு வலுசேர்க்க வேண்டும். ஆளுநரால்தான் திராவிடம் பிரபலம் அடைகிறது; திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார். திராவிடம் என்ற சிந்தனைப் போக்கு இல்லை ஆளுநர் கூறியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

பெண்களுக்கு இடஒதுக்கீட்டை 40%-ல் இருந்து 50%-ஆக உயர்த்தியது திராவிட மாடல். திமுக தேர்தல் நேரத்தில் சொல்லப்பட்ட உறுதி மொழிகளை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாய், உறுதியாய் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது. பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் உருவாக்கிக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மணமக்களிடம் தங்களுக்கு பிறக்க போகும் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

The post பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் உருவாகிக் கொண்டுள்ளது: திருமணவிழாவில் முதலமைச்சர் உரை appeared first on Dinakaran.

Tags : BJP ,Chief Minister ,Chennai ,MLA ,Prushotam ,Illa Wedding Ceremony ,K. Stalin ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்