×

அதானி குழும ஆடிட்டரிடம் விசாரணை: காங். விமர்சனம்

புதுடெல்லி: அதானி குழுமத்தின் ஆடிட்டர் எஸ்ஆர் பாட்லிபாய் மீது தேசிய நிதி அறிக்கை ஆணையமானது விசாரணையை தொடங்கி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘மே 2023ல் அதானி டோட்டல் கேஸ் லிமிடெட்டின் அதிகம் அறியப்படாத சட்டப்பூர்வ ஆடிட்டர் ராஜினாமா செய்தார். ஆகஸ்ட் மாதம் மற்றொரு ஆடிட்டர் ராஜினாமா செய்தார்.

இந்த முறை சர்வதேச அளவில் அறியப்பட்ட நிறுவனத்தின் ஆடிட்டர். அக்டோபரில் பட்டியலிடப்பட்ட ஐந்து அதானி குழும நிறுவனங்களின் ஆடிட்டர் பாட்லிபாய் தேசிய நிதி அறிக்கை ஆணையத்தால் விசாரிக்கப்படும் செய்தி வருகின்றது,பிரதமர் மோடியின் விருப்பமான குழுமத்தில் உண்மையில் ஏதோ நடக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post அதானி குழும ஆடிட்டரிடம் விசாரணை: காங். விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Adani Group ,NEW DELHI ,National Financial Reporting Commission ,SR Patlibhai ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...