சென்னை: சென்னையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை ஹாரிஸ் ஜெயராஜ்-ன் இசை நிகழ்ச்சி நடைபெறஉள்ளது.
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சியானது நடைபெறவுள்ளது. இந்த இசைநிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிருவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பம் தொடர்பாக சென்னை காவல்த்துறையினர் பல்வேறு நிபந்தனைகளுடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
குறிப்பாக ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி காரணமாக, இந்த நிகழ்ச்சியிலும் குளறுபடி நடந்துவிடகூடாது என்பதற்காக ஹாரிஸ் ஜெயராஜ் நிகழ்ச்சியானது பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்த்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
அனுமதிக்கபட்ட எண்ணிக்கையை விட அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யகூடாது எனவும், டிக்கெட்டுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் காவல்த்துறையினர் நிபந்தனை விதித்துள்ளனர். மேலும் நிகழ்ச்சி நடத்த 20,000 பார்வையாளர்கள் பங்கேற்க கூடிய மைதானத்தில், இதுவரை 15,000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யபட்டுள்ளது.
The post சென்னையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி appeared first on Dinakaran.