×

2 பிள்ளைகளை தவிக்கவிட்டு காதலனுடன் பெண் திடீர் ஓட்டம்

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே 2 பிள்ளைகளை தவிக்க விட்டு விட்டு காதலனுடன் பெண் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்கனியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே வாட்டர்டேங்க் தெருவை சேர்ந்தவர் சலாகுதீன் (52). பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். அவரது மனைவி ஷாமிலா (41). இந்த தம்பதிக்கு 21 வயதில் மகனும், 15 வயதில் மகளும் உள்ளனர். இதற்கிடையே ஷாமிலாவுக்கும், கேரள மாநிலம் அமரவிளை பகுதியை சேர்ந்த ராய் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து 2 பேரும் சகஜமாக பேசிவந்ததாக கூறப்படுகிறது. எனினும் 2 பேருக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக சலாகுதீனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். ஷாமிலா மட்டும் தனியாக இருந்து உள்ளார். மதியம் சுமார் 12 மணி அளவில் ஷாமிலாவின் மகன் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது ஷாமிலாவை காணவில்லை. உடனே அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து உள்ளார். அப்போது ஷாமிலாவின் வீட்டுக்கு வந்து ராய் என்பவர் தான் அழைத்துச்சென்றதாக தெரிவித்து உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மகன், உடனடியாக தந்தை சலாகுதீனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சலாகுதீனும் அங்கு வந்து மனைவியை பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். ஆனாலும் ஷாமிலா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருவட்டார் காவல் நிலையத்தில் சலாகுதீன் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷாமிலா, ராய் என்பவருடன்தான் சென்றாரா? அப்படியானால் அவர்கள் கேரளாவுக்கு சென்று தனிக்குடித்தனம் நடத்த திட்டமிட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2 பிள்ளைகளை தவிக்கவிட்டு காதலனுடன் பெண் திடீர் ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Kulasekaram ,Samiyarmadam ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!