×

திருப்பதி கோயிலில் 8 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருமலை: சந்திர கிரகணம் வருகிற 29ம் தேதி அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.22 மணி வரை நிகழ்கிறது. எனவே 28ம் தேதி இரவு 7.05 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடப்படும். மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சுத்தம் செய்து கிரகண பரிகார பூஜை, சுப்ரபாத சேவையும் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, சந்திர கிரகணத்தையொட்டி கோயில் கதவுகள் 8 மணி நேரம் மூடப்படும்.

The post திருப்பதி கோயிலில் 8 மணி நேரம் தரிசனம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Visana stop ,Tirupathi Temple ,Tirumalai ,Vision Stop ,Dinakaran ,
× RELATED திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம்...