×

மூதாட்டியை மிரட்டி 5 பவுன் நகை பறிப்பு

கிருஷ்ணகிரி, அக்.26: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மிரட்டி, 6 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மனைவி வத்சலாதேவி(70). இவர்களது மகன், மகள்கள் சென்னை மற்றும் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். சுந்தரபாண்டியன் இறந்து விட்டதால், வத்சலாதேவி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் வீட்டில் இருந்த போது, மர்ம நபர்கள் 2 பேர், திடீரென வீட்டிற்குள் நுழைந்து, வத்சலாதேவியை மிரட்டி, அவர் அணிந்திருந்த ₹1.50 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வத்சலாதேவி கூச்சலிட்டுள்ளார். அதற்குள் மர்ம நபர்கள் இருவரும், அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து வத்சலாதேவி அளித்த புகாரின் பேரில், பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை பறித்துச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

The post மூதாட்டியை மிரட்டி 5 பவுன் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Parkur, Krishnagiri district ,Dinakaran ,
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது