×

கொலை வழக்கில் வாலிபர் கைது

சாயல்குடி: சாயல்குடி அருகே நரிப்பையூர் வேப்ப மரத்துப்பனையை சேர்ந்த முகைதீன் மகன் அப்துல் அஜீஸ்(48). அதே பகுதியைச் சேர்ந்த சம்சுகனி மகன் முகம்மது அலிகான்(33). இவர் அப்துல் அஜீஸ் வீட்டின் முன்பு காரை நிறுத்தி அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிக்க விட்டது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி நள்ளிரவு முகம்மது அலிகான் அவரது மனைவியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, அப்துல் அஜீஸ் சண்டையை விலக்கி விட்டுள்ளார். அப்போது முன்விரோதம் காரணமாக முகம்மது அலிகான், கத்தியால் அப்துல் அஜீஸின் கழுத்தில் குத்தியதில், அவர் உயிரிழந்தார். இதுகுறித்து இறந்த அப்துல் அஜீஸின் மனைவி சிமியா பேகம், சாயல்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் முகம்மது அலிகானை கைது செய்து, நேற்று முன்தினம் ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

The post கொலை வழக்கில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Sayalkudi ,Abdul Aziz ,Mukaideen ,Naribaiyur ,Samsukani ,Dinakaran ,
× RELATED கடலாடி, முதுகுளத்தூர் கிராமங்களில்...