×

நெல்லை மாவட்டத்தில் போலீசார், வருவாய்துறையினர் மூலம் சாதி அடையாளங்கள் அழிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கட்டுடையார்குடியிருப்பு, சிதம்பராபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் சாதி அடையாளங்களை போலீசார் மற்றும் வருவாய்துறையினர் அழித்து வருகின்றனர். நெல்லை எஸ்பி சிலம்பரசன் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து சாதி அடையாளங்களை அழித்து வருகின்றனர். இதன்படி தாழையூத்து அருகேயுள்ள கட்டுடையார்குடியிருப்பு பகுதியில் 24 மின்கம்பங்களிலும், களக்காடு அருகேயுள்ள சிதம்பராபுரம், புதுதெரு பகுதிகளில் 20 மின்கம்பங்கள், 1 தண்ணீர் தேக்க தொட்டி, 3 சுவர்களிலும், திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தெற்குமாவடி,

கட்டளை புதுதெரு பகுதிகளில் 10 மின்கம்பங்கள், 1 சுவரிலும் எழுதப்பட்டிருந்த சாதி அடையாளங்களை காவல் துறையின் மற்றும் வருவாய்துறையினர் அழித்தனர். நேற்று ஒரே நாளில் 59 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து சாதிய அடையாளங்களை வர்ணம் பூசி அழித்தனர்.

The post நெல்லை மாவட்டத்தில் போலீசார், வருவாய்துறையினர் மூலம் சாதி அடையாளங்கள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Nellai ,Kattuyarkudiripu ,Chidambarapuram ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...