×

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ரூ.22லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்..!!

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே குளத்துப்பாளையம் பகுதியில் ரூ.22லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த பொரிதுல் இஸ்லாம், அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். வீட்டின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்டிருந்த உயர் ரக போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கோவையில் 2வது முறையாக புது விதமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தாக தெரிவித்தார்.

கோவை நகர காவல்துறை மற்றும் பார்க் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில், போதையில்லா கோவை என்ற ஆன்லைன் தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளத்தை (https://drugfreekovai.com) துவக்கியதன் முக்கிய நோக்கம் கல்லூரி மாணவர்களை போதைப்பொருளுக்கு எதிராக போராடுவதில் ஈடுபடுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இணையதளம் மாணவர்களை போதைப்பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்க அனுமதிக்கிறது, அதற்காக டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய இ-சான்றிதழ் உருவாக்கப்படும். போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்து உலக சாதனை படைக்க அதிகபட்ச மாணவர்களை ஈடுபடுத்தும் நோக்கத்தில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே குளத்துப்பாளையம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

The post கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ரூ.22லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Thondamuthur, Coimbatore ,Coimbatore ,Kulathupalayam ,Thondamuthur ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...