×

தன் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது!: 33 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப் பச்சனுடன் இணைவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு…!!

சென்னை: 33 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப் பச்சனுடன் இணைவது மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தை ஜெய்ப்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில் நடிகர் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார். தொடர்ந்து பகத் பாசீல், ராணா, நடிகைகள் மஞ்சு வாரியார் என பல்வேறு முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது, ‘தலைவர் 170’ படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், 33 ஆண்டுகளுக்கு பிறகு ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைக்காவின் ‘தலைவர் 170’ படத்தில் எனது வழிகாட்டியான அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, தன் இதயம் மகிழ்ச்சியில் துடிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

The post தன் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது!: 33 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப் பச்சனுடன் இணைவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு…!! appeared first on Dinakaran.

Tags : RAJINIKAND ,AMITABH BACHAN ,Chennai ,Rajinikanth ,Amitabh Bachchan ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...