×

காசாவிற்குள் ஒருபக்கம் குண்டு மழை.. மறுபக்கம் கத்தை கத்தையாக துண்டு சீட்டு மழை பொழியும் இஸ்ரேல் ராணுவம்!!

காசா: காசா மீது குண்டு மழை பொழிந்து வந்த இஸ்ரேல் விமானங்கள் திடீரென கத்தை கத்தையாக நோட்டீஸ்களை வீசி துப்பு துலக்கும் பணியையும் மேற்கொண்டுள்ளன. இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உணவு, குடிநீர், மின்சாரமின்றி காசா மக்கள் தவித்து வருகின்றனர். காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் 4 நாட்களுக்கு முன்னர் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.

இந்நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளால் இஸ்ரேலை சேர்ந்த 222 பேர் பிணைகைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை பற்றி தகவல் தருவோருக்கு சன்மானமும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்று அந்த துண்டு சீட்டுகளில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களுடன் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாலஸ்தீனர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அமைதியாக வாழவும், மனிதாபிமான கடமையாற்றவும் பிணை கைதிகளை பற்றிய தகவல்களை தெரிவிக்குமாறு இஸ்ரேல் ராணுவம் கேட்டு கொண்டுள்ளது.

The post காசாவிற்குள் ஒருபக்கம் குண்டு மழை.. மறுபக்கம் கத்தை கத்தையாக துண்டு சீட்டு மழை பொழியும் இஸ்ரேல் ராணுவம்!! appeared first on Dinakaran.

Tags : Gaza ,
× RELATED காசாவின் தெற்கு பகுதியான ரஃபா மீது...