×

விபத்தில் வாட்ச்மேன் பலி

ஸ்பிக்நகர், அக். 25: முள்ளக்காடு அருகே உள்ள பாரதிநகரை சேர்ந்தவர் பால்ராஜ் (60). தனியார் குடோனில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். முத்தையாபுரம் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த பைக், இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். முத்தையாபுரம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post விபத்தில் வாட்ச்மேன் பலி appeared first on Dinakaran.

Tags : Watchman ,Spiknagar ,Balraj ,Bharatinagar ,Mullakkad ,
× RELATED அத்திமரப்பட்டி -பொட்டல்காடு இடையே...