×

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கின் வாயில் மூச்சுக்காற்று கொடுத்து காப்பாற்றிய இளைஞர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பேரணாம்பட்டு: மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்குக்கு இளைஞர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்து காப்பாற்றினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் நேற்று முன்தினம் மாலை குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு குரங்கு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து மயக்கம் அடைந்தது. இதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த நிதிஷ் என்ற வாலிபர் பாய்ந்து வந்து, அந்த குரங்கின் வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்தும் அதன் மார்பு மீது இரண்டு கைகளை வைத்து அழுத்தியும் கடுமையாக போராடி குரங்கை காப்பாற்றியுள்ளார். இதனையடுத்து குரங்கு அங்கிருந்து சென்றது. மூச்சுக்காற்று கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய இளைஞர் நிதிஷை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கின் வாயில் மூச்சுக்காற்று கொடுத்து காப்பாற்றிய இளைஞர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Peranampatu ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...