×

மது அருந்தியதை கண்டித்ததால் தந்தையை அடித்து கொன்ற மகன்: தாம்பரத்தில் பரிதாபம்

தாம்பரம்: மது அருந்தியதை கண்டித்ததால், தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள பதுவஞ்சேரி, பஞ்சாயத்து காலனி பகுதியை சேர்ந்தவர் மணி (55). இவரது இளைய மகன் சந்துரு (19). மது பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த 18ம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட மணியின் மூத்த மகன் கார்த்திக் (32), தம்பி சந்துருவை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த தந்தை மணியும், சந்துருவை தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சந்துரு, தந்தை மணியை சரமாரியாக தாக்கி, கீழே தள்ளிவிட்டுள்ளார்.

அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக மணியை மீட்டு சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணி சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து சந்துருவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

The post மது அருந்தியதை கண்டித்ததால் தந்தையை அடித்து கொன்ற மகன்: தாம்பரத்தில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Selaiyur ,
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...