×

குஜராத்தில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது: 2 பேர் உடல் நசுங்கி பலி

பாலன்பூர்: குஜராத்தின் பாலன்பூர் நகரில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர். குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த ஆண்டு மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 141 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது பனஸ்கந்தாவின் பலன்பூர் நகரில் தேசிய நெடுஞ்சாலை 58ல் பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் இந்த பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் அஜய் மாலி(30), மயூர் பர்மர்(20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குஜராத்தில் கட்டுமானத்தில் உள்ள பாலங்கள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர் கதையாக நீடிப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

The post குஜராத்தில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது: 2 பேர் உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : Palanpur ,Gujarat ,
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...