×

சேலம் – கோவை நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் தீ: முன்கூட்டியே பேருந்து நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சேலம் – கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் தீ பற்றியது. சில நொடிகளிலேயே தீ பேருந்து முழுவதுமாக பரவியது. சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தின் முன் பகுதியில் திடீரென தீ பற்றியுள்ளது. இதை பார்த்த காரில் கடந்து சென்றவர்கள் தீ பரவியதை கண்டு ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் சுதாரித்து கொண்ட ஓட்டுநர் பேருந்தை அந்த இடத்திலேயே ஓரமாக நிறுத்தினார்.

பின்னர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தில் உள்ள பயணிகளிடம் தகவலை கூறி அவர்களின் உடமைகளுடன் உடனடியாக வெளியேற்றினர். இதனால் அதிர்ஷ்டாவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. பின்னர் பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீயானது ரேடியேட்டரில் இருந்து பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் – கோவை நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் தீ: முன்கூட்டியே பேருந்து நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : SALEM ,KOH ,KOWAI ,KOWA ,KARUMATHAMBATI, ,KOWAI DISTRICT ,Dinakaran ,
× RELATED சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின