×

மலேசியாவில் சிலம்பம் போட்டி மதுரை மாணவ, மாணவிகள் வெற்றி: மாணிக்கம் தாகூர் எம்.பி பாராட்டு

 

திருமங்கலம், அக்.23: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற மதுரை மாவட்ட மாணவ, மாணவிகளை நேற்று விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் பாராட்டி கௌரவித்தார். மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான நான் ஒலிம்பிக் சிலம்ப போட்டிகளில் திருமங்கலம் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இவர்கள் சிலம்பம், வாள்வீச்சு, சுருள்வீச்சு, இரட்டைகம்பு தொடும்முறை உள்ளிட்ட பல்வேறு பிரிவு போட்டிகளில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

நேற்று திருமங்கலத்தில் அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டினர்.பின்பு சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார். பின்னர் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன், காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் ராஜதேசிங்கு, வட்டாரத்தலைவர்கள் முருகேசன், பாண்டியன், திருமங்கலம் நகராட்சி கவுன்சிலர் அமுதா சரவணன், பிசிசி உறுப்பினர்கள் உலகநாதன், மாநகராட்சி கவுன்சிலர் சுவேதா சத்யன், கராத்தே மாஸ்டர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மலேசியாவில் சிலம்பம் போட்டி மதுரை மாணவ, மாணவிகள் வெற்றி: மாணிக்கம் தாகூர் எம்.பி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Silambam Competition ,Malaysia ,Madurai ,Manikam Tagore M. B ,Thirumangalam ,Madurai District ,Manikam Tagore M. P ,Dinakaran ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...