×

ஆட்டோவுடன் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஆந்திராவை சேர்ந்தவர் கைது வாணியம்பாடியில் போலீஸ் அதிரடி

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் ஆட்டோவில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து அண்டை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் ஆந்திராவிற்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள தமிழக ஆந்திர எல்லை பகுதி சோதனைச்சாவடிகளில் குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், குடிமைப்பொருள் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஆட்டோவுடன் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஆந்திராவை சேர்ந்தவர் கைது வாணியம்பாடியில் போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Andhraman ,Vaniyambadi ,Tirupattur ,Vaniyampadi ,Vaniyampadi… ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...