- பூலம்பாடி பால் கூட்டுறவு சங்கம்
- பெரம்பலூர்
- பால் திணைக்களம்
- தமிழ்நாடு அரசு
- பூலம்பாடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
- இந்திய வெளிநாட்டு வங்கி
- பூலம்பாடி
- பூலம்பாடி பால் கூட்டுறவு சங்கம்
- தின மலர்
பெரம்பலூர்: தமிழக அரசின் பால்வளத்துறை, டி.ஆர்.டி.193 பூலாம்பாடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பூலாம்பாடி இணைந்து நடத்தும் கறவை மாட்டு கடன் லோன் மேளா நிகழ்வு பூலாம்பாடி பேரூராட்சியில் 21ம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பூலாம்பாடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 50 நபர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் மொத்தம் ரூ.50 லட்சம் கறவை மாட்டு கடன் வழங்கப்பட்டது. கவுரவ விருந்தினராக டத்தோ. எஸ். பிரகதீஷ் குமார் கலந்து கொண்டார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தஞ்சை மண்டல மேலாளர் நாகேஸ்வர ராவ் தலைமை வகித்தார். பெரம்பலூர் பால்வளத்துறையின் கூட்டுறவு சார்பதிவாளர் செந்தில் துறையின் நலத்திட்டங்கள், கிராம மக்களின் பொருளாதார வளர்ச்சியில் ஆவின் நிறுவனத்தின் பங்கு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ராமசாமி மற்றும் பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி சங்க பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலர் சத்தியன் நன்றி கூறினார்.
The post பூலாம்பாடி பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கறவை மாடு வாங்க லோன் மேளா appeared first on Dinakaran.