×

காத்மாண்டுவில் நில நடுக்கம் 95 வீடுகள் இடிந்தன

காத்மாண்டு: நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் நேற்று காலை 7.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவில் பதிவான அந்த நிலநடுக்கம் தாடிங் மாவட்டத்தை மையமாக கொண்டு ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. அதன் அதிர்வுகள் பாகமதி மற்றும் கண்டகி மாவட்டங்களிலும் உணரப்பட்டது. அதன் பின் 3 முறை லேசான அதிர்வுகள் பரவலாக உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் தாடிங் மாவட்டம் ஜுவாலாமுகி முனிசிபாலிட்டியில் உள்ள 20 வீடுகள் தரைமட்டமானதுடன், 75 வீடுகளின் சுவர்கள் இடிந்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்க சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

The post காத்மாண்டுவில் நில நடுக்கம் 95 வீடுகள் இடிந்தன appeared first on Dinakaran.

Tags : Earthquake ,Kathmandu ,Nepal ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்