×

ரெட்டமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் சைக்கிள் களப்பயணம்

 

மதுராந்தகம், அக்.23: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ரெட்டமங்கலம் கிராமம் ஆதிதிராவிட நலத்துறை மேல்நிலை பள்ளியை சேர்ந்த சாரண, சாரணியர் மாணவ, மாணவியர் 25 பேர், திறன் மேம்பாட்டு பயிற்சி சார்ந்து நேற்று முன்தினம் சைக்கிள் களப்பயணம் மேற்கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் முத்துமணி ஆலோசனையின்பேரில், ஆசிரியர் முனுசாமி வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த சைக்கிள் களப்பயணம் நெல்வாய் கூட்ரோடு பகுதியில் தொடங்கி 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரிக்கிலி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நிறைவு பெற்றது.

அப்போது, கரிக்கிலி ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பாகொடியான் பள்ளி மாணவர்களை வரவேற்று கரிக்கிலி பறவைகள் சரணாலயம் குறித்தும், பறவைகள், வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், விலங்குகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் எடுத்துரைத்தார். வனப்பகுதியில் இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் பாத்திரம் இல்லாமல் சமைக்கும் முறையில் சோளம், உருளைக்கிழங்கு, சப்பாத்தி போன்றவற்றை தீயில் வேக வைத்து சாப்பிட்டனர். மேலும், அவர்களுக்கு தீயை மூட்டுதல், அனைத்தல், தீயில் இருந்து தங்களை தற்காத்து கொள்வது ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

The post ரெட்டமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் சைக்கிள் களப்பயணம் appeared first on Dinakaran.

Tags : Redtamangalam Govt School ,Madhuranthakam ,Sarana ,Adi Dravida Health Department Higher Secondary School ,Redtamangalam ,Chengalpattu district ,Redtamangalam government ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள்...