×

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அக்கா, தங்கை பலி

ஜோலார்பேட்டை: தண்டவாளத்தை கடக்க முயன்ற அக்கா, தங்கை ரயில் மோதி பலியாகினர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சாவித்திரி(66). இவரது அக்கா வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டை சேர்ந்த வசந்தா(67). இவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உறவினரின் ஈமச்சடங்கில் பங்கேற்கநேற்று காலை ஆம்பூர் ரயில் நிலையம் வந்தனர். அவர்களுடன் வசந்தாவின் மகன் பிரகாசும் வந்தார்.

ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க, டிக்கெட் எடுப்பதற்காக பிரகாஷ் டிக்கெட் கவுன்டருக்கு சென்றார். அப்போது வசந்தாவும் சாவித்திரியும் 2வது பிளாட்பாரத்திற்கு செல்ல ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி பலியாகினர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அக்கா, தங்கை பலி appeared first on Dinakaran.

Tags : Jollarpet ,Vinnamangalam ,Ambur, Tirupathur district ,Dinakaran ,
× RELATED ஆம்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: 2 மணி நேரம் பயணிகள் தவிப்பு