×

காய்ச்சலுக்கு எஸ்ஐ சாவு

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள புரந்தான் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்வர் சந்திரன்(47). இவர், உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி இவருக்கு காய்ச்சல் மற்றும் சளி தொல்லை ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சந்திரன் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த போது, அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்திரன் இறந்தார். இவர் 1997ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்தார். சந்திரனுக்கு சசிகலா(44) என்ற மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

The post காய்ச்சலுக்கு எஸ்ஐ சாவு appeared first on Dinakaran.

Tags : SI ,Jayangkondam ,Chandran ,Puranthan Pudupalayam ,Tha.Phaur ,Ariyalur district ,Wodiarpalayam ,police station ,
× RELATED ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில்...