×

உக்ரைன் மீது மீண்டும் ரஷ்யா தாக்குதல் 2 பேர் பலி

கீவ்: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக போரின் தாக்கம் படிப்படியாக குறைந்திருந்தது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான மத்திய உக்ரைன் பகுதியில் உள்ள கிரிவ்யிரி நகர் மீது ரஷ்யா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

அதனால் அப்பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலை கட்டிடம் தரைமட்டமானது. அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி 60 வயது முதியவர் ஒருவர் இறந்ததுடன், பொதுமக்கள் பலர் படுகாயமடைந்தனர். கெர்சன் தெற்கு மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட மற்றொரு ஏவுகணை தாக்குதலில் ஒருவர் இறந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post உக்ரைன் மீது மீண்டும் ரஷ்யா தாக்குதல் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Russia ,Ukraine ,Kiev ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...