×

அல்உம்மா இயக்க தலைவர் பாஷாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

கோவை: அல்உம்மா இயக்க தலைவர் பாஷா, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் பாஷா (80), அல்உம்மா இயக்க தலைவரான இவர், 1998ல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து, கோவை கே.ஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர் பக்தவத்சலம் கூறுகையில்,“பாஷாவுக்கு, இருதய கோளாறு மற்றும் நுரையீரல் கோளாறு ஏற்பட்டுள்ளது. மூளையில் சிறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்’’ என்றார்.

The post அல்உம்மா இயக்க தலைவர் பாஷாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Al-Umma ,Pasha ,Coimbatore ,Al-Umma movement ,Basha ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...