×

டிவி பத்திரிகையாளரான காதல் கணவரை பிரிந்த இத்தாலி பிரதமர்: பாலியல் குறித்த சர்ச்சையால் கோபம்


ரோம்: டிவி பத்திரிகையாளரான காதல் கணவரை இத்தாலி பிரதமர் மெலோனி பிரிந்ததாக, அவரே சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். இத்தால் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கும், காதலனான தொலைக்காட்சிப் பத்திரிகையாளர் ஆண்ட்ரியா ஜியாம்ப்ரூனோ என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். ஆனால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வெளியிட்ட பதிவில், ‘ஆண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவுடனான என்னுடைய திருமண உறவு கடந்த 10 ஆண்டுகளாக நீடித்தது.

எங்களுக்கு இடையிலான பிரச்னையால் பிரிந்துவிட்டோம். அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரத்தில் உள்ளேன்’ என்று கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், ஜியாம்ப்ரூனோவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அவர் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் உறவு குறித்து சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்டதாகவும், அது நாடு முழுவதும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. இதுவே அவர்களின் பிரிதலுக்கு காரணமாக இருந்து வருகிறது.

The post டிவி பத்திரிகையாளரான காதல் கணவரை பிரிந்த இத்தாலி பிரதமர்: பாலியல் குறித்த சர்ச்சையால் கோபம் appeared first on Dinakaran.

Tags : Rome ,Italy ,Meloni ,
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு