லக்னோ: உலகக்கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பைத் தொடரில் இன்று காலை 19வது ஆட்டத்தில் நெதர்லாந்தும், இலங்கையும் மோதின. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் ஆடிய நெதர்லாந்து 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக சைப்ரண்ட் ஏங்கல் பிரெக்ட் 70 ரன்களையும், வான் பீக் 59 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் தில்ஷான் மதுஷங்க, ரஜிதா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், எம்.தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சதீர சமரவிக்ரம 91 ரன்களிலும், துஷான் 4 ரன்களிலும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு இலங்கை முற்றுப்புள்ளி வைத்து தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.
The post உலகக்கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை appeared first on Dinakaran.
