×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது


மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம்(70). இவர் அதே பகுதியில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து கயிறு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுமியும் தனது தாத்தா, பாட்டியுடன் தங்கி உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 7ம் தேதி சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். இது குறித்து திருமக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சிறுமியை திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார். இதில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது வேலாயுதம் என தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நேற்று இரவு வேலாயுதத்தை கைது செய்து மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை கிளை சிறையில் அடைத்தனர். இது குறித்து எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Bocso ,Mannargudi ,Velayutham ,Mela Natham ,Tiruvarur district ,Pocso ,Dinakaran ,
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...