×

பெண் ரவுடி, அவரது உறவினர்களுடன் தொடர்பில் இருந்த புழல் சிறை பெண் காவலர் பணி நீக்கம்..!!

சென்னை: பெண் ரவுடி, அவரது உறவினர்களுடன் தொடர்பில் இருந்த புழல் சிறை பெண் காவலர் எழிலரசி பணி நீக்கம் செய்யப்பட்டார். புழல் பெண்கள் தனிச் சிறையில் பணியாற்றி வந்த காவலர் எழிலரசி, சிறை நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கொடுங்கையூரைச் சேர்ந்த ரவுடியும் கஞ்சா வியாபாரியுமான தாரணி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கஞ்சா வியாபாரி தாரணி, அவரை சந்திக்க வரும் உறவினர்களுடன் காவலர் எழிலரசி தொடர்பில் இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

The post பெண் ரவுடி, அவரது உறவினர்களுடன் தொடர்பில் இருந்த புழல் சிறை பெண் காவலர் பணி நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,Chennai ,Ezilarasi ,
× RELATED யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு