×

கோவை பீளமேட்டில் மசாஜ் சென்டரில் விபசாரம்: 4 பெண் புரோக்கர்கள் கைது உரிமையாளர், மேனேஜர் தலைமறைவு

 

கோவை, அக். 21: கோவை பீளமேட்டில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய 4 பெண் புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான உரிமையாளர் மற்றும் மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை பீளமேடு நவ இந்தியா எஸ்டிவி நகர் 2-வது தெருவில் மசாஜ் சென்டர் உள்ளது. இங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விபசாரம் நடத்திய பெண் புரோக்கர்கள் பீளமேட்டை சேர்ந்த அஸ்ரின் (23), ராமநாதபுரத்தை சேர்ந்த திவ்யபாரதி (24), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த லட்சுமி (40), ராக்கிபாளையத்தை சேர்ந்த ராஞ்சு (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மசாஜ் சென்டர் உரிமையாளர் ராஜ்குமார், மேலாளர் கவுதம் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

The post கோவை பீளமேட்டில் மசாஜ் சென்டரில் விபசாரம்: 4 பெண் புரோக்கர்கள் கைது உரிமையாளர், மேனேஜர் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்