×

ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்: மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகள் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தபட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாதவர்களுக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2023-24ம் கல்வியாண்டில் புதிது மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகியோ அல்லது https://bcmbcmiw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணைய முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

The post ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Thanjavur ,IIT ,IIM ,IIIT ,NIT ,Universities ,
× RELATED தஞ்சாவூர் பகுதியில் பலாப்பழம் விற்பனை அமோகம்