×

சிவில் நீதிபதி முதல் நிலை தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு நீதிபதிகள் வாழ்த்து

பூந்தமல்லி: சிவில் நீதிபதிகளுக்கான முதல் நிலை தேர்வில் வெற்றிபெற்ற வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் வாழ்த்து தெரிவித்தனர். பூந்தமல்லி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், இளம் வக்கீல்கள் நீதிபதி தேர்வு எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி மையம் பூந்தமல்லியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் 120 இளம் வழக்கறிஞர்களுக்கு வாரம்தோறும் நீதிபதி தேர்வுக்கான சிறப்பு பயிற்சி நடத்தப்பட்டு வந்தது. இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 12 வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கான சிவில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா, பூந்தமல்லி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. பூந்தமல்லி குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் தாமஸ் பர்னபாஸ் தலைமை வகித்தார். செயலாளர் ரஞ்சித்குமார், பொருளாளர் ஜெகதீஸ் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள், பேனா பரிசு வழங்கி, பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதிகளாக வேண்டும் என வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ, மூத்த வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கான முதல்நிலை தேர்வில் வெற்றிபெற்ற வழக்கறிஞர்களை வாழ்த்தி பேசினர். மேலும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிவில் நீதிபதி முதல் நிலை தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு நீதிபதிகள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Poontamalli Criminal Lawyers Association ,Dinakaran ,
× RELATED மதுரவாயலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்