×

கண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு அங்கன்வாடி ஊழியர் சங்கம் போராட்டம்

விருதுநகர், அக்.21: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என அனைத்து தரப்பினரும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சில மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நிறைவுற்றுள்ளது.கலெக்டரிடம் நடவடிக்கை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை கைவிடவில்லை என்றால் அக்.25ல் தமிழகம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

The post கண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு அங்கன்வாடி ஊழியர் சங்கம் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Virudhunagar ,Anganwadi Workers and Helpers Association District ,President ,Esther ,Virudhunagar Collector's Office ,
× RELATED அங்கன்வாடி கட்ட ரூ.26 லட்சம் டெண்டர்...