×

வால்பாறைக்கு சுற்றுலா வந்த போது சோகம் ஆற்றில் மூழ்கி 5 மாணவர்கள் பலி

வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலா வந்த 5 கல்லூரி மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம், வால்பாறை பகுதிக்கு பல்வேறு இடங்களில் சுற்றுலா வரும் மக்கள் அங்குள்ள சோலையாற்றில் குளித்து மகிழ்கின்றனர். கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்த சரத் (20), அஜய் (20), தனுஷ்குமார் (20), வினித்குமார் (23) மற்றும் உக்கடத்தை சேர்ந்த நபில் (20) ஆகியோர் கிணத்துகடவு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் 5 பேரும் கல்லூரி படிக்கும் நண்பர்கள் 5 பேருடன் இரு சக்கர வாகனத்தில் வால்பாறையை நேற்று சுற்றி பார்க்க சென்றனர். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்து விட்டு கடைசியாக சோலையார் எஸ்டேட் செல்லும் வழியில் சோலையாற்றுக்கு சென்றனர்.

அப்போது 5 பேர் மட்டும் தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது ஒருவர் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து 4 பேரும் தண்ணீருக்குள் மூழ்கினர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல் துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கிய 5 பேரையும் சடலமாக மீட்டனர். பின்னர் 5 மாணவர்களின் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பலியான தனுஷ், வினித் இருவரும் சகோதரர்கள்.

The post வால்பாறைக்கு சுற்றுலா வந்த போது சோகம் ஆற்றில் மூழ்கி 5 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Sogam river ,Valparai ,Coimbatore, Valparai ,Dinakaran ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை