×

அக். 30ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

புதுடெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி காட்சி மூலம் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் நடத்தப்படும் கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நவம்பர் மாதத்தின் நீரின் அளவு குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, முன்னதாக பரிந்துரைக்கப்பட்ட நீர் முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post அக். 30ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Cauvery Disruption Committee ,New Delhi ,Cauvery Management Committee ,Vineet Gupta ,Dinakaran ,
× RELATED கர்நாடக மாநிலத்தின் கருத்தை...