×

குன்றத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை குறித்த கலந்தாய்வு

குன்றத்தூர்: குன்றத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட அறிக்கை தயாரித்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பங்கேற்றார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் அப்பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

இதில், சென்னை பெருநகர தென்பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டத்திற்காக, குன்றத்தூர் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள 11 ஊராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் தொடர்பாக அங்குள்ள நீர்நிலைகள் மாசுபாட்டை தவிர்க்கும் வகையில் கண்காணித்திடவும், திட்டமிடமும் மற்றும் கட்டமைப்பு குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி ஆட்சியர் சங்கீதா, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், நகராட்சி ஆணையர் குமாரி, நகர் மன்ற தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post குன்றத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை குறித்த கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Kunradur Municipality ,Kunrathur ,Kalachelvi Mohan ,Kunrattur ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரத்தில் தொழில், வர்த்தக...