×

ஏக்கருக்கு ரூ.1 லட்சம்… தரமான லாபம் தரும் தாய்லாந்து மரவள்ளி!

மலைகள் சூழ்ந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, தானிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப்பகுதியில் ராதாபுரம் அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் (50), தாய்லாந்து ரகத்தை சேர்ந்த மரவள்ளி பயிரை சாகுபடி செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார். இவரோடு, இவரது மனைவி, 3 மகன்கள், மருமகள்கள் என குடும்பமே விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது. மரவள்ளி வயலில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கணேசனைச் சந்தித்தோம்.
`
` எனக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 3 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருக்கிறேன். 3 ஏக்கர் நிலத்தில் தாய்லாந்து ரக மரவள்ளியைப் பயிரிட்டு இருக்கிறேன். 5 ஏக்கர் நிலத்தில் செம்மரம் பயிரிட ஏற்பாடு செய்து வருகிறேன். கடந்த 2 வருடங்களாக இந்த ரக மரவள்ளியைப் பயிரிட்டு வருகிறேன். இது கொஞ்சம் கசப்புச்சுவையோடு இருப்பதால் பன்றிகள் வந்து சேதப்படுத்தாது. மனிதர்களும் நமக்கு தெரியாமல் இதை சாப்பிட மாட்டார்கள். ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் ஆலை பயன்பாட்டுக்காக இதை வாங்கி செல்கிறார்கள். இதனால் துணிந்து இந்தப் பயிரை சாகுபடி செய்கிறோம்’’ என தாய்லாந்து ரக மரவள்ளி குறித்து நமக்கு அறிமுகம் செய்து வைத்து பேச ஆரம்பித்தார் கணேசன்.

“எங்களுக்கு பிரதான தொழிலே விவசாயம்தான். பாரம்பரியமாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். என்னுடன் மனைவி, மகன்கள், மருமகள்கள் எல்லாருமே விவசாயம் செய்கிறார்கள். இதனால் நாங்கள் சிறப்பாக விவசாயம் செய்ய முடிகிறது. மற்ற பயிர்களைவிட மரவள்ளி நல்ல லாபம் தருகிறது. தண்டராம்பட்டு வட்டாரத்தில் தாய்லாந்து ரகம் வெள்ளை மற்றும் கருப்பு மரவள்ளிக்கிழங்கு 2000 ஏக்கருக்கு சாகுபடி செய்யப்படுகிறது.

மரவள்ளியை நடவு செய்வதற்கு தை மாத பட்டம்தான் சிறந்த பட்டம். அந்த சமயத்தில்தான் மிதமான வெயில் நிலவும். அந்த சீதோஷ்ண நிலை மரவள்ளி நடவுக்கு ஏற்றதாக இருக்கிறது. மழைக்காலங்களில் நடவு செய்தால் நன்றாக வேர் பிடிக்காது. மரவள்ளியை நடவு செய்ய முதலில் 5 கலப்பை கொண்டு நிலத்தை நன்றாக ஏர் ஓட்டுவோம். கடைசி உழவின்போது ஏக்கருக்கு 3 டிப்பர் தொழுவுரமிட வேண்டும். எங்கள் பகுதியில் தொழுவுரம் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் நாங்கள் 3 ஏக்கருக்கும் சேர்த்து 6 டிப்பர் தொழுவுரம்தான் போட்டோம். தொழுவுரம் பற்றாக்குறை ஏற்பட்டதால் இலை, தழைகளை போட்டு உழவு செய்தோம்.

The post ஏக்கருக்கு ரூ.1 லட்சம்… தரமான லாபம் தரும் தாய்லாந்து மரவள்ளி! appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai district ,Thandarampatu ,Tanipadi ,Radhapuram ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...