×

அன்னவாசல் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து இரண்டு பெண்கள் காயம்

 

விராலிமலை, அக்.20: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகம் ஊராட்சியைச் சேர்ந்த முனியாண்டி மகள் ஜெயலட்சுமி(27). இவர் வயலோகம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம் பணித்தள பொறுப்பாளராக உள்ளார். இவர் நேற்று பணி செய்யும் பெண்களுக்கு தேனீர் வாங்கி கொடுப்பதற்காக வயலோகத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் முதலிப்பட்டி அருகே சென்றார்.

அப்போது சாலையின் குறுக்கே சென்று கொண்டிருந்த குறைந்தழுத்த மின்கம்பி திடீரென அறுந்து இவர் மீது விழுந்தது. இதில் இவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இவரை உடனடியாக அக்கம், பக்கத்தினர் மீட்டு வயலோகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெயலட்சுமிக்கு அங்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருடன் பயணம் செய்த சாந்தி (35) என்ற பெண்ணுக்கு லேசான காயத்துடன் தப்பினார். மின்கம்பி அறுந்த விழுந்த வேகத்தில் இவர்கள் தூக்கி வீசப்பட்டதால் பெரும் விபத்து நிகழாமல் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

The post அன்னவாசல் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து இரண்டு பெண்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Annavasal ,Viralimalai ,Jayalakshmi ,Vialokam Uratchi ,Annavasal, Pudukkottai district, Annavasal ,Dinakaran ,
× RELATED தந்தையை அடித்து கொன்ற மகன்: கிணற்றுக்குள் குதித்து தற்கொலை முயற்சி