×

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ரயில் நிலையத்தில் தூய்மை பணி

 

கும்பகோணம், அக். 20: கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ரயில் நிலையத்தை ரயில் உபயோகிப்பாளர்கள், தன்னார்வ அமைப்பினர் சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர். திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட திருநாகேஸ்வரம் ரயில் நிலையத்தில் தூய்மை பணிகளை தேப்பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் தொடங்கி வைத்தார். ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், தேப்பெருமாநல்லூர் ஊராட்சி பொதுப் பணியாளர்கள்,

நூறு நாள் வேலை திட்ட பயனாளிகள் இணைந்து திருநாகேஸ்வரம் ரயில் நிலையத்தில் புல், புதர்கள், செடி கொடிகள், குப்பை ஆகியவற்றை அகற்றி சுத்தம் செய்தனர். இப்பணிகளில் திருச்சி கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கிரி, பாபநாசம் சரவணன், தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க பொருளாளர் நடராஜ்குமார், தேப்பெருமாநல்லூர் ஊராட்சி துணைத்தலைவர் புகழேந்தி, ரயில்வே தஞ்சாவூர் பிரிவு பொறியாளர் பிரேம்குமார், கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்க தலைவர் கண்ணன், செயலாளர் முரளி, அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ரயில் நிலையத்தில் தூய்மை பணி appeared first on Dinakaran.

Tags : Thirunageswaram railway station ,Kumbakonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...