×

திருவெறும்பூர் அருகே ரயிலில் அடிபட்டு பாய் வியாபாரி பலி

 

திருச்சி, அக்.20:திருவெறும்பூர் அருகே ரயிலில் அடிபட்டு பாய் வியாபாரி பரிதாபமாக இறந்தார். திருச்சி திருவெறும்பூர் மேம்பாலம் அடியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார். தகவலறிந்த ரயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், விசாரணையில் திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியை சோ்ந்த ஆலப்பன் இவரது மகன் பாய் வியாபாரி கண்ணன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவெறும்பூர் அருகே ரயிலில் அடிபட்டு பாய் வியாபாரி பலி appeared first on Dinakaran.

Tags : Tiruverumpur ,Trichy ,Tiruchi ,
× RELATED திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்...