×

சமூக வலைதளங்களில் அவதூறு பாஜ நிர்வாகி அதிரடி கைது

போச்சம்பள்ளி, அக்.20: மத்தூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு ஓட்டலில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹலால் செய்யப்பட்ட உணவா, இல்லையா என்பது குறித்து போர்டு வைக்கவில்லை எனக்கூறி, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த கடைக்காரர், ஹலால் உணவு கிடையாது என கடை முன்பு போர்டு வைத்தார். இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இதுதொடர்பான அவதூறு வீடியோ ஒன்றை, வில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜ நிர்வாகி திருப்பதிகண்ணன் (38) என்பவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த மத்தூர் போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி கண்ணனை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சமூக வலைதளங்களில் அவதூறு பாஜ நிர்வாகி அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Bochampalli ,Mathur ,
× RELATED மணல் கடத்திய 2 பேருக்கு வலை