விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் அருகில் கடந்த செப். 15ம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் பேசும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து புகாரின்பேரில் செல்லப்பாண்டியன் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு மூலம் முன்ஜாமீன் பெற்றார். நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று விளாத்திகுளம் நீதிமன்றத்தில் செல்லபாண்டியன் ஆஜராகி ஜாமீனில் சென்றுள்ளார். விளாத்திகுளம் காவல் நிலையத்தில் அவர் 15 தினங்களுக்கு காலை 10.30மணிக்கு கையெழுத்திட உத்தரவாகியுள்ளது.
The post முதல்வர் குறித்து அவதூறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆஜர் appeared first on Dinakaran.