×

மெஞ்ஞானபுரம் அருகே பெண்ணை தாக்கிய தம்பதிக்கு ரூ.3000 அபராதம்

சாத்தான்குளம், அக். 19: மெஞ்ஞானபுரம் அருகே பெண்ணை தாக்கிய கணவன், மனைவிக்கு ரூ.3000 அபராதம் விதித்து சாத்தான்குளம் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. மெஞ்ஞானபுரம் அருகே உள்ள ஜே.ஜே நகரைச் சேர்ந்த முத்து மனைவி பெரியபிராட்டி. இவரது மகளுக்கும், மற்றொரு மாணவிக்கும் ஏற்பட்ட பிரச்னையில் ஜெ.ஜே. நகரைச் சேர்ந்த ராஜ்குமார், அவரது மனைவி சுமதி, ராஜ்குமாரின் தம்பி ஆனந்தகுமார் ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு பெரியபிராட்டி வீட்டிற்கு சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியபிராட்டி, மெஞ்ஞானபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணையின்போது ஆனந்தகுமார் உயிரிழந்து விட்டார். இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசி ரீனா, கணவன், மனைவிக்கு ரூ.3000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு வக்கீல் ராஜ்மோகன் வாதிட்டார்.

The post மெஞ்ஞானபுரம் அருகே பெண்ணை தாக்கிய தம்பதிக்கு ரூ.3000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Menjnanapuram ,Satankulam ,Chatankulam Court.… ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது