×

திருவெறும்பூர் அருகே கேட்பாரற்று சாலையில் கிடந்த 9 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

திருவெறும்பூர், அக்.19: திருவெறும்பூர் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த 9 மூட்டை ரேஷன் அரிசியை திருவெறும்பூர் வட்ட வழங்கல் அலுவலர் கைப்பற்றி விசாரணை நடத்தினார். திருச்சி மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட மலைக்கோவில் ராஜவீதியில் சாலையில் 6 மூட்டைகளில் ரேஷன் அரிசி கிடப்பதாக திருவெறும்பூர் வட்ட வழங்க அலுவலர் நாகலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசாருடன் விரைந்து சென்று பார்வையிட்டார். அங்கு சாலையில் கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றி விசாரணை நடத்தினார். மேலும் அங்குள்ள ஒரு வீட்டில் 3 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்தது தெரியவந்தது. அதையும் கைப்பற்றி வட்ட வழங்கல் அலுவலர் விசாரித்தார். அந்த வீட்டில் யாரும் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தி வந்தது யார் என்று வட்ட வழங்கல் அலுவலர் நாகலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

The post திருவெறும்பூர் அருகே கேட்பாரற்று சாலையில் கிடந்த 9 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thiruverumpur ,Tiruverumpur ,
× RELATED திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்...