×

மேலூர் நான்குவழிச் சாலையில் கார் விபத்து தந்தை கண்முன்னே மகன் பரிதாபச் சாவு

மேலூர்: மேலூர் அருகே நான்குவழிச் சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் தந்தை கண் முன்னே மகன் பரிதாபமாக பலியானார். சென்னை திருவெற்றியூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் சுரேஷ். இவர் தனது மனைவி லட்சுமிதேவி, மகன் சூரிய பிரகாஷ், மகள் கிருத்திகா, மாமியார் சுந்தரவதனம் ஆகியோருடன் காரில் திருச்செந்தூருக்கு மேலூர் நான்குவழிச் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தார். காரை சுரேஷ் ஓட்டி சென்றார். கருங்காலக்குடி திருச்சுனை அருகே சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதிவிபத்துக்குள்ளானது.
இதில் முன்பக்கம் அமர்ந்திருந்த சூரியபிரகாஷ்(15) தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே தன் குடும்பத்தினர் கண் முன்னே பரிதாபமாக பலியானார். எஸ்எஸ்ஐ சுரேஷ்க்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. மற்றவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செயது விசாரித்து வருகின்றனர்.

The post மேலூர் நான்குவழிச் சாலையில் கார் விபத்து தந்தை கண்முன்னே மகன் பரிதாபச் சாவு appeared first on Dinakaran.

Tags : Mellur four-lane road ,Melur ,Chennai ,Mellur ,-lane road ,
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!