×

தாய் இறந்த துக்கம் தாங்காமல் 20 பிரஷர் மாத்திரை சாப்பிட்டு மகன் தற்கொலை

வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி அருகே அய்யம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (53). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமலா (48). ராஜேந்திரனின் தாய் கன்னியம்மாள் கடந்த11ம் தேதி புதன்கிழமையன்று உடல்நிலை சரியாமல் இறந்தார். அதிலிருந்து கடந்த ஒரு வாரமாக தாய் இறந்த துக்கத்தில் ராஜேந்திரன் இருந்தள்ளார். மேலும் அவர் ரத்த அழுத்த நோய்க்கு மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார் . இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜேந்திரன் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது மனைவி அமலா கணவனை பார்த்து ஏன் வேலைக்கு செல்ல வில்லையா என்று கேட்டுள்ளார். அதற்கு ராஜேந்திரன் நான் 20 பிரஷர் மாத்திரைகளை சாப்பிட்டு விட்டேன் என்று கூறியுள்ளார் .

The post தாய் இறந்த துக்கம் தாங்காமல் 20 பிரஷர் மாத்திரை சாப்பிட்டு மகன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Velayuthampalayam ,Rajendran ,Ayyampalayam Adhitravidar Street ,Thotakurichi ,Karur district ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்