×

கரூர் கரூர் வெங்கமேடு அருகே வீட்டின் கதவை உடைத்த 2 பேரை விரட்டிப்பிடித்த மக்கள்

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெண்ணைமலை பகுதி அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. நேற்று காலை பைக்கில் வந்த 2 பேர், ஒரு குறிப்பிட்ட வீட்டை நோட்டமிட்டனர். வீடு பூட்டியிருப்பதாக நினைத்த இருவரும், வீட்டின் முன்பக்க கதவை உடைக்க ஆரம்பித்தனர். அப்போது, வீட்டினுள் இருந்த பெண்கள், தனது உறவினர்களிடம் உடனடியாக போனில் தகவல் தெரிவித்தனர். உறவினர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வீட்டின் முன்பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்களிடம் யாரென கேட்டுக் கொண்டிருந்த போதே, இருவரும் சுற்றுச்சுவரை தாண்டி தப்பியோடினர். தொடர்ந்து விடாது அவர்களை உறவினர்கள் தேடிச் சென்றனர். இருவரும், வெண்ணைமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து மண்மங்கலம் நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறிச் சென்றதாக தகவல் கிடைத்தது.

The post கரூர் கரூர் வெங்கமேடு அருகே வீட்டின் கதவை உடைத்த 2 பேரை விரட்டிப்பிடித்த மக்கள் appeared first on Dinakaran.

Tags : Karur Karur Vengamedu ,Karur ,Vennaimalai ,Karur Corporation ,Karur Karur ,Vengamedu ,Dinakaran ,
× RELATED வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்