×

சென்னையில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகளும் பதிவு செய்யாவிட்டால் சிறை தண்டனை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகளும் பதிவு செய்யாவிட்டால் சிறை தண்டனை விதிக்கபடும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014, விதிகள் 2015-ன் கீழ்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அறக்கட்டளை பதிவு பத்திரம், வரைபடம் மற்றும் உறுதிச் சான்று போன்றவற்றை அக்.30க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத விடுதிகள் https://tnswp.com என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகளும் பதிவு செய்யாவிட்டால் சிறை தண்டனை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,District Collector ,Dinakaran ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...