×

ஈரானும் துருக்கியும் எச்சரிக்கை

காசா: இஸ்ரேல்-ஹமாஸ் போரால் உலகமே இரண்டு பகுதிகளாகப் பிரிந்து பார்க்கப்படுகிறது. துருக்கியும் ஈரானும் நேரடியாக இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த இரு நாடுகளும் பாலஸ்தீனத்துடன் நிற்கின்றன. ‘காசா மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் பல முனைகளில் போர் தொடங்கும். இதன் விளைவுகளை இஸ்ரேல் அனுபவிக்க வேண்டும்.

சுதந்திர பாலஸ்தீனம் உருவானால்தான் அமைதி ஏற்படும்’ என துருக்கி அதிபர் கூறியிருந்தார். ஈரானும் அதே கருத்தை வலியுறுத்தியது. இது மட்டுமின்றி, துருக்கியும் ஈரானும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம், தங்களது கூட்டு முயற்சிகளுக்கு ஆதரவு கோரியுள்ளன.

The post ஈரானும் துருக்கியும் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Iran ,Turkey ,Gaza ,Israel ,Hamas ,Dinakaran ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...